அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வணிக வள மையம், இ சேவை மையம் தொடக்கம் மற்றும் மகளிர் சுய உதவி குழுவிற்கு ஒரு கோடி கடனுதவி வழங்கினர் - மாவட்ட திட்ட இயக்குனர் காளிதாசன் வழங்கி தொடங்கி வைத்தார்.
அலங்காநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களுக்கு ரூ.25 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட திட்ட இயக்குனர் காளிதாசன் வழங்கினார். |
சின்னஇலந்தைகுளம் கிராமத்தில் மகளிர் சுய உதவி குழு சார்பில் இ சேவை மையம் தொடங்கப்பட்டது. |
இந்த நிகழ்ச்சிக்கு மகளிர் குழு தலைவர் ஹெலன்கீதா தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் வெள்ளைபாண்டி, வட்டார மேலாளர் மகாலெட்சுமி, யூனியன் சேர்மன் பஞ்சு, மகளிர் குழு செயலாளர் மணிமேகலை பொருளாளர் சகாயகில்டா மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், மரக்கன்றுகள் வழங்கினர்.
சின்னஇலந்தைகுளம் கிராமத்தில் மகளிர் சுய உதவி குழு சார்பில் வணிக வள மையம் தொடங்கப்பட்டது. |
இதேபோன்று அலங்காநல்லூர் யூனியன் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் தொழில் முனைவோர்கள் வாழ்வாதார மேம்பாடு அடையும் பொருட்டு, வட்டார வணிக வள மையம் தொடங்கப்பட்டு இந்த மையத்தின் மூலம் 100 தொழில் முனைவோர்களுக்கு மாவட்ட திட்ட இயக்குனர் காளிதாசன் ரூ. 25 லட்சத்திற்கான கடன் தொகையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர்கள் கதிரவன், பேராட்சி பிரேமா, ஊராட்சி மன்ற தலைவர் முருகன், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் முத்துசெல்வி, ராதிகா, கலாரானி, உமாதேவி, தேவி, மற்றும் வட்டார இயக்க மேலாண்மை பணியாளர்கள் மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.